×

மணல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல் குடியாத்தம் அருகே

குடியாத்தம், பிப்.18: குடியாத்தம் அருகே மணல் கடத்திய டிப்பர் லாரிைய போலீசார் பறிமுதல் செய்தனர். குடியாத்தம் அடுத்த உள்ளி கூட்ரோடு பகுதியில் தாலுகா போலீசார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த டிப்பர் லாரியை தடுத்து நிறுத்தினர். போலீசாரை பார்த்தவுடன் டிரைவர் லாரியை ரோட்டில் நிறுத்திவிட்டு தப்பி ஓடினார். பின்னர் போலீசார் லாரியில் சோதனை செய்தபோது அனுமதி இல்லாமல் மணல் அள்ளி வந்தது தெரிய வந்தது. பின்னர் போலீசார் லாரி மற்றும் அதில் இருந்த மணல் ஆகியவற்ைற பறிமுதல் செய்து குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் லாரி உரிமையாளர் குடியாத்தம் அடுத்த கல்மடகு கிராமத்தை சேர்ந்த கமல் மீது வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

The post மணல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல் குடியாத்தம் அருகே appeared first on Dinakaran.

Tags : Kudiattam ,Kudiatham ,Kootrodu ,Dinakaran ,
× RELATED குடியாத்தம் அருகே கட்டிட தொழிலாளி...